எவருக்கும் கதவடைப்பு கிடையாது
தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளுடனும் இணையத் தயார்
“தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி நேற்றுத் தெரிவித்தார்.
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் நேற்று (11) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி ஏனைய கூட்டணிகளை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தான் முதன்மை நோக்கமாகும் என்றார்.
ஹற்றன் சுழற்சி நிருபர்
from tkn