சேருநுவரவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சேருநுவர, லிங்கபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே நேற்றிரவு (02)  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Wed, 07/03/2019 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை