மாணிக்கக்கல் திருடியவர் அதே தினத்தில் பிடிபட்டார்

மாணிக்கக்கல் மற்றும் காசோலையொன்ற திருடிய நபரொருவர், அதே தினத்தில் வெள்ளவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

82 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் 130,000 ரூபா பெறுமதியான காசோலை ஆகியனவே நேற்று (26) திருட்டுப் போயுள்ளது.

மொரட்டுவையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணிக்கும் பஸ் வண்டியில் வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டிக்கு பயணித்த ஒருவரின் மாணிக்கக்கல் மற்றும் காசோலையே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர், பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரின் முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், மாணிக்கக்கல் மற்றும் காசோலை திருடிய சந்தேகநபரொருவரை  வெள்ளவத்தை சவோய் திரையரங்கத்திற்கு அருகில் அன்றையதினம் கைதுசெய்துள்ளதோடு, மாணிக்கக்கல் மற்றும் காசோலையையும் மீட்டுள்ளனர்.  

பாணந்துறையை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 07/27/2019 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை