அமெரிக்க பொலிஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோவைச் சேர்ந்த கடத்தல் மன்னன் குவாக்கினோ சாப்போவுக்கு ஆயுள் மற்றும் முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு மெக்சிகோ சிறையிலிருந்து தப்பிய இவர் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2017ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.
தன் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை என நீதிமன்றத்தில் இவர் வாதிட்டார்.
மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை பொருள் கடத்தல் சாம்ராஜியமே இவர் நடத்தி வந்தார். 2009ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் 701ஆம் இடத்தில் இருந்தார்.
இவருடைய அப்போதைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலர்களாக இருந்தது.
Fri, 07/19/2019 - 06:00
from tkn