கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து: ஒரு படை வீரர் பலி, 8 பேர் காயம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளடன் 8பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவ பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள பகுதியின் வீதி வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 3இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5 பேர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம் குறூப் நிருபர்

Sun, 07/14/2019 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை