தலைமன்னாரில் 717.82 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மணல் கரைகளில் கடற்படையினர் நேற்று (23) தேடுதல் நடத்தியபோதே, இப்பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்பீடி இலைகள் 13 பொதிகளில் அடைக்கப்பட்டு காணப்பட்டதாகவும், கடலில் இருந்து மிதந்து வந்த நிலையில் இவை காணப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள், யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
Wed, 07/24/2019 - 09:27
from tkn