46 நாடுகளுக்கு வருகை தரு வீஸாவை ஓகஸ்ட்டில் அறிமுகப்படுத்த திட்டம்

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், 46 நாடுகளுக்கு இலவசமாக வருகை தரு வீஸாவை (on arrival) இலங்கையில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டம் கடந்த ஏப்ரல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை அடுத்து, இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது

எவ்வாறாயினும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.  

Wed, 07/24/2019 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை