நைஜீரியாவில் 4 வாகனங்கள் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கானோ மாநிலத் தலைநகரில் இருந்து 85 கிலோமீற்றர் தூரத்தில் டின்யார் மடிகா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டதாக மத்திய வீதிப் பாதுகாப்பு அணைக்குழுவின் சுபைரு மாடோ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பஸ்கள் மற்றும் இரண்டு கார்கள் தொடர்புபட்ட இந்த விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இதில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். வீதிக் குழிகளை தவிர்ப்பதற்கு முயன்றபோது வேகமாக வந்த இந்த நான்கு வண்டிகளும் மோதியுள்ளன.

மோசமான வீதிக் கட்டமைப்பைக் கொண்ட நைஜீரியாவில் இவ்வாறான விபத்துகள் வழக்கமாக இடம்பெற்று வருகின்றன. கடந்த ஏப்ரலில் அதிகமனோரை ஏற்றிவந்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் திருமண விருந்து ஒன்றுக்கு பங்கேற்கச் சென்ற 19 பேர் உயிரிழந்தனர்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை