திருமலை மாவட்டத்தில் 3161.36 மில்லியனில் 5224 வேலைத்திட்டங்கள்

திருகோணமலை மாவட்டத்திற்கென 2019ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 3161.36மில்லியன் ரூபா நிதியில் 5224அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 726.74மில்லியன் பெறுமதியான 1399வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார். 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 56.77மில்லியனில் 357வேலைத்திட்டங்களும் நிறைவு பெற்றுள்ளன. 

கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 1242.35மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 2149வேலைத்திட்டங்களில் 301நிறைவடைந்துள்ளதுடன் ஏனையவை நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டம், விளையாட்டு அபிவிருத்தி, கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டம், மீள்குடியேற்ற வேலைத்திட்டம், சிரிசர பிவிசும உள்ளிட்ட வேலைத்திட்டங்களும் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கிழக்கு மாகாண சபையின் ஊடாக 639.87மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 401அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், உள்ளூராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சுகாதார மற்றும் சுகாதார சேவைகள் அமைச்சு, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீதி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு, கிராமங்களின் விசேட தேவைகள் சிறப்புச் செயற்திட்டம் ஆகியவற்றின் ஊடாக இவை முன்னெடுக்கப்படுகின்றன.  

மாவட்டத்தின் 11பிரதேச செயலகப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் நிறைவுக்கு வரும் வகையில் முன்னெடுப்புக்கள் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.   

திருமலை மாவட்ட விசேட நிருபர் 

 

 

Sat, 07/13/2019 - 11:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை