பாராளுமன்றம் விசேட அமர்வு; 31, 01 ஆம் திகதிகளில் விசேட ஏற்பாடு

பாராளுமன்றம் விசேட அமர்வாக எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை மற்றும் முதலாம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கூடவுள்ளது.  31ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30மணி முதல் மாலை 6.30மணி வரையும் அதேபோன்று வியாழக்கிழமை காலை 10.30மணி முதல் மாலை 6.30மணி வரையும் இவ்விசேட அமர்வுகள் இடம்பெறவுள்ளன.  

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்காக 31 ஆம் திகதி புதன்கிழமையும் அனுதாபப் பிரேரணையை நிறைவேற்ற வியாழக்கிழமையும் பாராளுமன்றத்தை கூட்டுவதென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்துக்கமைய இவ்வமர்வு இடம்பெறுகிறது. (ஸ) 

Sat, 07/27/2019 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை