பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சீ.சீ.டிவி பொருத்துவதற்கு எதிராக மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பையடுத்து மூடப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மீள திறக்கப்படவுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ச்சியாக இரு வாரங்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்தமையினால் பல்கலைக்கழக நிர்வாகம் முகாமைத்துவ பீடத்தினை மூடுவதற்கு தீர்மானித்தது. இதனை மீளத் திறக்க கோரி முகாமைத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர். இதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மீள் திறக்கப்படவுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
(கண்டி தினகரன் சுழற்சி நிருபர்)
Sat, 07/27/2019 - 08:44
from tkn