வலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிப்பு

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று (12) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

யுத்தகாலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய  யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் இக் காணிகள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆளுநர், அதனை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரனிடம் கையளித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2,963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையை குறிப்பிட்ட ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

 

 

 

Sat, 07/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை