கடந்த 24 மணித்தியாலத்தில் போதையிலிருந்த 260 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்தான விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (12) காலை 6.00மணியிலிருந்து இன்று (13) காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்திற்குள் மது போதையில் காணப்பட்ட 260சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த 05ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் காணப்பட்ட 2,540சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 07/13/2019 - 11:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை