மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 201 பேர், நேற்று (23) காலை 6.00 மணியிலிருந்து இன்று (24) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 5,042 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
Wed, 07/24/2019 - 12:02
from tkn