நைஜீரியாவில் சூடு: 23 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் பதற்றம் கொண்ட போர்னோ மாநிலத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் மீது பொக்கோ ஹராம் ஆயுதக் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீதே மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த துடுப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் ஊர் திரும்பிய பின்னர் உள்ளுர் வேட்டைக்காரர்கள் மற்றும் போராளிகள் சடலங்கை மீட்டுள்ளனர். இங்கு பொக்கோ ஹராம் குழுவினர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை