காபுல் நகரில் மூன்று குண்டு தாக்குதல்கள்: 12 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 12 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அரச ஊழியர்களை அழைத்துச் சொன்ற பஸ் வண்டி ஒன்றை இலக்கு வைத்து காலையில் முதல் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அதில் ஐவர் கொல்லப்பட்டு 10 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“சிறு பஸ் வண்டியில் குண்டு வெடித்ததோடு அதனைத் தொட ர்ந்து பஸ் தாக்குதலுக்கு அருகில் தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்தார். அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் கார் ஒன்று வெடிக்கச் செய்ததன் மூலம் மூன்றாவது குண்டு தாக்குதல் இடம்பெற்றது” என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹிமி குறிப்பிட்டுள்ளார்.

இதில் தற்கொலை தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். முன்றாவது குண்டு வெடிப்பில் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இதில் காபுலில் நடந்த ஒரு கண்டு தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றபோதும் மற்றைய இரண்டு தாக்குதல்களையும் மறுத்துள்ளனர்.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை