உலக அளவில் இடம்பெற்ற போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் பலியென ஐ.நா அறிக்கை

உலக அளவில் இடம்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12,000 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே கடந்த சில வருடங்களாகப் போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்குமிடையே கடந்த 18 வருடங்களாகப் போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது,

ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் 'கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ,000 ஐ தாண்டியுள்ளது.

இந்தக் கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை