அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்துக் குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவு வடிவேல் வீதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கத்திக் குத்து நேற்றிரவு (14) இடம்பெற்றதாக சம்மாந்துறை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர், காரைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கத்திக் குத்தை மேற்கொண்ட சந்தேக நபர், சம்மாந்துறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(காரைதீவு குறூப் நிருபர் -சகா)
from tkn