திருமலையில் தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

வடகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) பி.ப.2.00 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரிய சேவை 3ii தரத்திற்கு நியமனம் செய்ய கடந்த மாதம் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண பேரவை செயலகத்திலும் மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் 1,302 பேர் நேர்முகத் தேர்வில் பங்குபற்றியிருந்தனர். இதில் 1,130 பேர் தகைமை மதிப்பீடுகளின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு மாகாண கல்வி அமைச்சுகள் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

கிண்ணியா விசேட நிருபர்

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை