சில இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம்

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மேற்குக் கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர்  வேகத்தில் பலத்தகாற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில

இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், பொதுமக்களிடம், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Thu, 06/20/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை