ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த மூவர் கைது

ஹற்றன் பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூவரை நேற்று போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்

ஹற்றன் போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மூன்று சந்கே நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொழும்பிலிருந்து ஹெரோயின் போதைபொருளை கொண்டு வந்து ஹற்றனில் விற்பனை செய்துள்ளனர்.

இதில் பிரதான சந்தேக நபர் 24 வயதுடைய நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரிடருந்து 07 ஹெரோயின் பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹற்றன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களுக்கு அமைய ஹற்றன் சமனல பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 2 ஹெரோயின் பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொத்தமாக 09 ஹெரோயின் பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை