மட்டக்களப்பு மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது வீட்டை தீயிட்டு கொளுத்திய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டில் கணவன்,மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்ற பின்னர் ஆத்திரமடைந்த கணவன் தனது வீட்டை தீயிட்டு எரித்துள்ளார். அதனை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் வீடு முற்றாக எரிந்த நிலையில் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் அதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவீந்திரன் தலைமையிலான குழுவினரும் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் பண்டார தலைமையிலான குழுவினர் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர்.
மணல்சேனை நிருபர்
from tkn