யாழ்.தீவுப்பகுதியில் வெடி பொருட்கள் டெட்டனேட்டர்கள் மீட்பு

யாழ்.நகர் பகுதியை அண்டிய தீவொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை

 நடத்தினர். இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸார் மீட்டனர். இதனுள் டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்.குறூப்,பருத்தித்துறை விசேட நிருபர்கள்

 

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை