நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொசன் உற்சவத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரு நாட்களுக்கு மூடுவதற்கு, மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினமும் (15) நாளையதினமும் (16) மதுபானசாலைகளை மூடுமாறும் மதுவரித் திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரை ஒருவாரகாலம்  மூடுவதற்கும் மதுவரித் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Sat, 06/15/2019 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை