நெதர்லாந்தில் நாடெங்கும் தொலைத்தொடர்பு துண்டிப்பு

நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ரோயல் கே.பி.என் சேவை செயலிழந்தது. அதன் பின்னர் இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், வலையமைப்பு ஊடுருவப்பட்டதாக தெரியவில்லை என்று அந்நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக பொலிஸ் நிலையம், மருத்துவமனைக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை