வீதியில் ஒயில் ஊற்றப்பட்டதால் விபத்து

யாழ்ப்பாண மாநகர சபையிலிருந்து வேறொரு இடத்திற்கு ஓயில் எடுத்துச் செல்லப்பட்டபோது ஒயில் கேன்கள் வீழ்ந்து வீதியில் ஊற்றியுள்ளது. இதனால் வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாறு ஒயில் ஊற்றப்பட்டதையடுத்து மாநகர சபை ஊழியர்களால் வீதியில் மணல் போடப்பட்டது. எனினும் நேற்று திங்கட்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு காலாஞ்சி கொடுக்கும் வைபவத்திற்காக காலை மாநகர சபையால் வீதிக்கு நீர் தெளிக்கப்பட்டது. இதனால் காய்ந்திருந்த ஒயில் மீது தண்ணீர் ஊற்றப்பட்டதால் மீண்டும் வழுக்கு தன்மை ஏற்பட்டு வீதியால் சென்றவர்கள் வழுக்கி வீழ்ந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்ைக எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்ைக விடுக்கின்றனர்.

புங்குடுதீவு குறூப் நிருபர்

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை