கிளிநொச்சி நகரில் நீதிமன்றத்துக்கு பின்புறமாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இன்று (09) மதியம் திடீரெனத் தீ பரவியுள்ளது.
இத்தீ கரைச்சி பிரதேச சபையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்;ட காணியில் சிறைக்கைதிகள் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஏற்கெனவே தறிக்கப்பட்டு காய்ந்திருந்த ஆலமரத்திற்கு தீ வைக்கப்பட்ட வேளையில், அது பாரியளவில் சுவாலை விட்டு எரிந்து, மக்கள்; குடியிருப்புகளிலுள்ள வான் பயிர்களுக்கு பரவியுள்ளது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
(எஸ்.என்.நிபோஜன்)
Sun, 06/09/2019 - 14:25
from tkn