பலாங்கொடை கனகநாயகம் கல்லூரி அகில இலங்கை போட்டிக்கு தெரிவு

பலாங்கொடை இ/கனகநாயகம் மத்திய கல்லூ ரி வீரர்கள் 20 வயதின் கீழ் மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண த்தின் பிரபலமான பாடசாலைகளின் கிரிக்கெட் அணிகளை தோல்வியடையச் செய்து இவர்கள் தமது கல்லூரிக்கு இப்பெருமை அபிமானத்துக்குரிய வெற்றியை பெற்று தந்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் ஜீ.ராஜரத்னம் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ஆசிரியர்களின் வழிநடத்தலில் இவ்வெற்றி இலக்குகளை அடைய முடிந்ததாக பாடசாலை உதவியதிபர் எம்.ஜே.எம்.பெரூஸ் தெரிவித்தார்.தமது பாடசாலைக்கு விளையாட்டுதுறைக்கு அவசியமான வளங்கள் கிடைக்குமாயின் தமது வீரர்கள் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண மட்ட இறுதி போட்டிகள் அண்மையில் எம்பிலிபிட்டிய மகாவலி உரையாடலில் நடைபெற்றபோது இ/ஆனந்த மைத்ரீய தேசிய பாடசாலை வீரர்களை வெட்டல் தோல்வியடையச் செய்தனர். பலாங்கொடை இ/ கனகநாயகம் மத்திய கல்லூரி தமக்குரிய 4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 35 ஓட்டங்களை பெற்றனர். எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பலாங்கொடை இ/ ஆனந்த மைத்ரீய மத்திய கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 16 ஓட்டங்களை மட்டுமே பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை