காற்று, மழையுடன் கூடிய நிலைமை தொடரும் சாத்தியம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கு தொடரும்என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்  வேகத்தில்  பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும்  அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்ஷ  எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன்  மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்  பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம்   கேட்டுக்கொண்டுள்ளது.

 

Sat, 06/22/2019 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை