பிரதான சந்தேக நபரான இராணுவ வீரர் நேற்று கைது

அக்கரைப்பற்று கொள்ளை:

அக்கரைப்பற்று பதுர் பள்ளிவீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான இராணுவ வீரர் நேற்று (12) கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று இராணுவ முகாமில் கடமையாற்றும் ஆர்.எம்.ஜகன் ரத்னாயக்கா (34) என்ற இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர் அம்பாறை பதியத்தலாவ பிரதேசத்திலுள்ள உறவினர்களின் வீடொன்றில் வைத்து நேற்று (12) கைது செய்யப்பட்டதாகவும்

இவரிடமிருந்து கொள்ளையிடப்பட்டநகை 17 பவுண்,1 இலட்சத்து 95 ஆயிரத்து 610 ரூபா பணமும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் டி.வி.ஆர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டது. இராணுவ வீரரின் கைத்தொலைபேசியும், அவரது இராணுவ வீரருக்கான அடையாள அட்டையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இவர்கள் கொள்ளைக்குப் பயன்படுத்திய வானும்

கைப்பற்றப்பட்டது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது: அக்கரைப்பற்று, பதுர் பள்ளி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் கடந்த 9ஆம் திகதி மாலை புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து சோதனை யில் ஈடுபட்ட இவர்கள் வீட்டிலிருந்த பணம் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக இன்னும் ஒரு இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை