தங்கநகைகளுடன் சிங்கப்பூர் பிரஜைகள் இருவர் கைது

இரண்டு கோடி 60இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் பிரஜைகள் இருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு 04.850கிலோகிராம் தங்கநகைகளை இவர்கள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 55 மற்றும் 45 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

Sat, 06/29/2019 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை