மலையக வைத்தியசாலைகளில் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை

மலையக வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாக தேசிய மக்கள் பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் டி.என்.ஜனாஸ்ட்டர் தெரிவித்தார்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் தேசிய மக்கள் பேரவையினருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதன்போது மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் தொடரும் குறைபாடுகள் மற்றும் மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் தொடர்பான குறைபாடுகள் போன்றவை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் ஒரு மாதகாலப்பகுதியில் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை