கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டளை பகுதியில் கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (08) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் மதுபோதையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனை, அதிகாலை ஒரு மணியளவில் இரும்பால் தாக்கி அவரது மனைவி  கொலை செய்துள்ளார். இக்கொலையைச் செய்த பின்னர் அவரது மனைவி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும்,  பொலிஸார்  தெரிவித்தனர்

3பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகன் ஜெயராமன் (44)  என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  -எம். கிருஸ்ணா)

Sun, 06/09/2019 - 12:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை