முஸ்லிம் பாடசாலைகள் திங்களன்று திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள  அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறைக்குப் பின்னர்  எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படுமென கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட  விடுமுறைக்காக கடந்த மே 03ஆம் திகதி மூடப்படவிருந்த நிலையில் ஏப்ரல்  21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து மூடப்பட்டன.  நாட்டிலுள்ள  ஏனைய பாடசாலைகள் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் கடந்த மே 13ஆம் திகதி  இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

Sat, 06/08/2019 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை