போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று (31) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கிராண்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து அப்போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சேதவத்தை, வல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய பெண்ணொருவரே நேற்று (31) மாலை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து 12கிராம் 50மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் ஜஸ் ரக போதைப்பொருள் மற்றும்  கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 500மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளையும் 04கிராம் கஞ்சாவையும் 726,102ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

உடுப்பிட்டியைச் சேர்ந்த 22வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

Sat, 06/01/2019 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை