நீரில் மூழ்கி தந்தையும் இரு மகள்களும் பலி

கிரிந்த கடற்கரையில் சம்பவம்

கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால கடற்கரையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் கரையோரமாக நடந்துச்சென்றுக் கொண்டிருந்த போது திடீரென உருவான பாரிய அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வருகிறது.

நுவரெலியாவிலிருந்து சுற்றுலாச் சென்றுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரு மகள்களும் நேற்றுக் காலை 7.30 மணியளவில்

யால கடற்கரையோரத்தில் நீராடச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அலைத் தாக்தியதால் நால்வரும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி கிரிந்த மற்றும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும் இடைநடுவில் வைத்து தந்தையும் ஒரு மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாயும் மற்றுமொரு மகளும் தெபரவெவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மற்றொரு மகள் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை