கழிவறையென அவசரகால கதவை திறந்ததால் பரபரப்பு

பாகிஸ்தான் விமானத்தில்:

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் கழிவறை என நினைத்து அவசர காலக் கதவைத் திறந்ததால் இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி புறப்படவிருந்த விமானம் ஏழு மணி நேரம் தாமதித்தது.

அவசரகாலக் கதவை அந்தப் பெண் திறந்ததால் நெருக்கடி நிலையின்போது விமானத்திலிருந்து வெளியேற பயன்படுத்தப்படும் சறுக்கு மிதவைகள் இயக்கப்பட்டன.

அதையடுத்து, விமானத்தில் இருந்த நாற்பது பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அவர்களது பயணப் பெட்டிகளும் வெளியேற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் ஹோட்டலில் தங்க பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்தது. சுமார் 7 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானம் மீண்டும் புறுப்பட்டுச் சென்றது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இளம் பெண் விமானத்தில் முதல் முறையே பயணித்திருப்பதாக தெரியவருகிறது.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை