பாண்டிருப்பு விளையாட்டுக்கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் 32 கழகங்கள் பங்குபற்றியிருந்தன .

இறுதிப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் பாண்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக தலைவர் என்.சங்கீர்த் தலைமையில் இடம்பெற்றது

இறுதிப்போட்டியில் கல்முனை டொல்பின் அணியும், திருக்கோவில் உதயசூரியன் அணியும் போட்டியிட்டன இதில் உதயசூரியன் அணி PSC TROPHY 2019 கிண்ணத்தை வெற்றிகொண்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் ஸ்தாபகர் என். குமாரசூரியம் மற்றும் கழக ஆலோசகர் எஸ். .தருமலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

இச்சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்கிய அனைவருக்கும் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் நன்றிகளையும் தெரிவித்தனர். பாண்டிருப்பு விளையாட்டுக்கழக சுற்றுப்போட்டி

(காரைதீவு குறூப் நிருபர் )

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை