நம்பகத் தன்மையை கட்டியெழுப்பும் மாநாடு தஜிகிஸ்தானில் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரி இன்று உரை

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (13) தஜிகிஸ்தான் பயணமானார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத் தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு CICA ஆனது, ஆசியாவில் நம்பகத் தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்குடன் 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும். இலங்கை CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக இலங்கை 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. CICA உறுப்புரிமையானது உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்த உதவியாகவுள்ளது.

CICA யின் உறுப்பு நாடுகளில் ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், பங்காளதேஷ், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியன உள்ளடக்குகின்றன.

இதன் 05வது மாநாடு இன்று 14 மற்றும் நாளை 15 தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 15 ஆம் திகதி நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மான் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை