கடல் அலையில் அள்ளுண்டு தந்தையும் மகளும் உயிரிழப்பு

கிரிந்த – யால பகுதியில் தந்தையும் மகளும் கடல் அலையில் அள்ளுண்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடல் அலையில் அள்ளுண்ட தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிரிந்த மற்றும் தெவரவெவ வைத்தியசாலைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான இவர்கள், நுவரெலியாவிலிருந்து  குறித்த பகுதிக்கு சுற்றுலா வந்த நிலையில் இன்று (23) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

Sun, 06/23/2019 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை