அதிக பிடியெடுப்பு: கிறிஸ் கெய்ல் சாதனை

சவுத்தாம்ப்டன் போட்டியில் அம்லாவை ஆட்டமிழக்க செய்து அதிக பிடியெடுத்தவர் வரிசையில் மேற்கிந்தியதீவின் களத்தடுப்பாளர் வரிசையில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் முதலிடத்தைபிடித்துள்ளார்.

தென்ஆபிரிக்கா –- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 15-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆபிரிக்கா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் ஹசிம் அம்லா 7 பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காட்ரெல் பந்தில் கிறிஸ் கெய்லிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஹசிம் அம்லாவை பிடியெடுத்ததன் மூலம் அதிக பிடியெடுத்த மேற்கிந்தியதீவு வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். இதற்கு முன் கார்ல் கூப்பர் 120 பிடியெடுப்புகளை எடுத்துள்ளார் . இதை கிறிஸ் கெய்ல் நேற்று முறியடித்துள்ளார். பிரையன் லாரா 117 பிடியெடுப்பு 3-வது இடத்தில் உள்ளார்.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை