சனசமூக நிலையத்துக்கு அடிக்கல் நாட்டல்

வடமராட்சி, நாகர்கோவில் மேற்கு குருகுலம் சனசமூக நிலையத்துக்கான நிரந்தரக் கட்டடத்துக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

குருகுலம் சனசமூக நிலையத் தலைவர் யோ.சுமன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் கலந்து கொண்டார்.

ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன், பிரதேச செயலகம் சார்பாக கிராம சேவையாளர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் நாகர்கோவில் வட்டார உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார், நாகேஸ்வரா விளையாட்டுக் கழகத் தலைவர் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கரவெட்டி தினகரன் நிருபர்

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை