கோஹ்லிக்கு அபராதம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சவுதம்டனில் நடைபெற்ற போட்டியில் வீரர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எல்.பி டபல்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தார்ரை நோக்கி ஆக்ரோஷமாக வந்த தவறுக்காக விராட் கோஹ்லிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் அவருக்கு கிடைக்கும் தொகையில் 25 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறை கோஹ்லி ஒப்புக் கொண்டதால், மேற்கொண்டு எந்தவித அதிகாரபூர்வ விசராணையும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி வீரர்களுக்கான நான்கு நிலை தவறுகளில் முதல்நிலை தவறை மேற்கொண்டுள்ளார்.

நிலை ஒன்றில் உள்ள விதிகளை மீறினால் போட்டிக்காக வழங்கப்படும் தொகையில் 0-50 வீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களில் வெற்றிப் பெற்றது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை