மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நேற்று (14) மாலை மோட்டார் சைக்கிளொன்று, இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முனைக்காடு மேற்கு பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்று இதுவரையில் தெரியவில்லையென்பதோடு, எதற்காக அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் தரித்து வைக்கப்பட்டிருந்ததெனத் தெரியவில்லை எனவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்)
from tkn