காரிலிருந்து சடலம் மீட்பு

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தோரிஸ் ஜயந்தி மாவத்தையில் ஆணொருவரின் சடலம் இன்று (05) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் சாரதியின் ஆசனத்தில் குறித்த நபர் சடலமாக காணப்பட்டுள்ளதாகவும்,  மாலபே கஹன்தோட்ட வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Wed, 06/05/2019 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை