இம்முறை உலகக் கிண்ண போட்டித் தொடரானது முன்னைய காலங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. மிகவும் நீண்டதொரு போட்டித் தொடர் இதுவாகும். எனவே, போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கு மற்றையவர்கள் சொல்வதைப் போல மேலதிக நாளெனான்றை ஒதுக்குவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்காக இன்னும் செலவழிக்க வேண்டிவரும். அதேபோல வீரர்களுக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐ.சி.சியின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில், ”இம்முறை உலகக் கிண்ணத் தொடர் சற்று வித்தியாசமானதாகும்.
அதனால் அனைத்து லீக் ஆட்டங்களுக்கும் மேலதிக நாளொன்றை வழங்குவதென்பது நடைமுறை சாத்தியமல்ல. அதேபோல, அவ்வாறு மேலதிக நாளில் மறுபடியும் மழை பெய்தால் இன்னும் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இறுதியில் இந்தப் போட்டித் தொடரை எம்மால் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போய்விடும்” என அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் உள்ள வானிலையை பொறுத்தவரை உலகக் கிண்ணத் தொடர் முழுவதுமே மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுமாத்திரமின்றி, ”தற்போதுள்ள போட்டி அட்டவணைக்கு புறம்பாக எம்மால் மேலதிக நாளொன்றை ஒதுக்கி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்தால் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஏனெனில் இங்கிலாந்து பூராகவும் போட்டிகள் நடைபெறுவதால் அதை ஒளிபரப்புச் செய்யும் நிறுவனங்களுக்கும், அங்குள்ள அதிகாரிகளுக்கும் மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டிவரும். எனவே, உலகக் கிண்ணத்தில் மேலதிக நாளொன்றை வழங்குவதென்பது எமக்கு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
from tkn