நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்

சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டுமென இந்த உயரிய புனித பொசன் தினத்தில் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொசன் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது,

ஒரு நாட்டையும், நாட்டு மக்களையும் வந்தடையும் ஒரு தர்ம வழிமுறை அந்த மக்கள் சமூகத்தைப் புதுப்பித்து, சமூக, கலாசார, அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான மாற்றமொன்றை ஏற்படுத்தியமை தொடர்பாக உலக வரலாற்றில் காணப்படும் சிறந்த முன்னுதாரணமாக புத்த மதம் இலங்கையில் நிலைபெற்றமை ஊடாக ஏற்பட்ட சமூக மறு மலர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

உண்மையான தர்ம போதனையொன்று மக்கள் சமூகத்தில் நிலைபெறுவதற்கு ஆக்கிரமிப்புக்கள், வன்முறைகள் தேவையற்றது என்பது புத்த மதம் இலங்கையில் நிலைபெற்ற முறை மூலம் மிகவும் தெளிவாகிறது. புத்த பெருமான் காட்டித் தந்த தர்ம வழிமுறையை விளங்கிக் கொள்ளக் கூடிய மக்கள் சமூகமொன்று இங்கு காணப்படுகின்றது என்பதைத் தெளிவாக உணர்ந்த நிலையிலேயே மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்தார்.

இந்த உயரிய பொசன் போயா தினத்தில் இந்த உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தீவிரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் நாம் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும்.

வெளிப்புறச் சடங்குகள் மூலமன்றி தர்மத்தின் உண்மையான மையக் கருத்தில் கொண்டு எமது வாழ்வை வளப்படுத்திக் கொள்வோம். சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டுமென இந்த உயரிய பொசன் தினத்தில் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.   

Sun, 06/16/2019 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை