அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு; கம்பளையில் கடைகள் பூட்டு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரதன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக ஆரம்பித்துள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கண்டி, கெலிஓயா, கம்பளை ஆகிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஒரு சில இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காண முடிந்தது. இந்நிலையில் பகல் கண்டி நகரத்திலிருந்து பேராதனை வீதி வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு மக்கள் திரண்டு ஊர்வலமாக சென்றனர்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

 

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை