இந்து சமுத்திர பிராந்திய அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு சிங்கப்பூர் பாராட்டு

இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அயராது முன்னெடுத்து வரும் முயற்சியை சிங்கப்பூரின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் பாராட்டியுள்ளார்.  

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர், இந்து சமுத்திரத்தின் அமைதிக்காக இலங்கை முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.  

இச்சந்திப்பு நேற்று முன்தினம் 13ஆம் திகதி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும்  சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.  

அத்துடன் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.இச்சந்திப்புகளில் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் சந்திர தாஸூம் கலந்து கொண்டார். 

 

Sat, 06/15/2019 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை