பதுளை நகரை அண்டிய பதுளுப்பிட்டிய, அந்தெனிய உள்ளிட்ட பிரதேச பகுதிகளிலும் நேற்றுமுன் தினம் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீடுகளின் கூரைகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
மரங்களும் சரிந்தும், முறிந்தும் வீழ்ந்துள்ளன. கூரை சீட்கள், தகடுகளும் உடைந்தும், வீழ்ந்துமுள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளுப்பிட்டிய முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு முன்பாகவும், சூழவுள்ள வீடுகளும் இப்பெருங்காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல் சந்திக்கருகிலுள்ள மின்சாரத்தூண் கீழே சரிந்து விழுந்துவிடும் ஆபத்தான நிலையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களை பிரதேச கிராம சேவையாளர்கள் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
பதுளை தினகரன் நிருபர்
from tkn